அ.தி.மு.க. கூட்டணி உடையாது .. ஜெ.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்ததால் கூட்டணியில் அதிருப்தி ஏதும் இல்லை என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மைசூரில் இருந்து திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகள்அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தொகுதி பங்கீடு ஒன்றும் கிரிக்கெட் அல்ல, அது குறித்து ரன்னிங் கமென்டரி அளிப்பதற்கு என்று கோபமான ஜெயலலிதா, அனைத்து தரப்பினருக்கும்சாதகமாகவே தொகுதிப் பங்கீடு இருக்கும்.
அ.தி.மு.க.வின் அரசியல் விவகாரக்குழு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அனைத்து தலைவர்களின் கருத்தையும் பரிசீலித்து பிப்ரவரி 13ம் தேதிபத்திரிகையாளர்களை சந்திக்கும் போது மேற்கொண்டு தகவல்கள் தருகிறேன்.
பல்வேறு கொள்கைகளுக்காக பல கட்சிகள் உள்ளன. அதுபோன்ற ஒரு கட்சியான பா.ம.க.வின் புலி ஆதரவு கொள்கை தனித்தமிழ்நாடு கோருவதுஅல்ல, தனி ஈழ ஆதரவே.
பா.ம.க இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் இருக்காது. எனவே பா.ம.க.வை ஜெயலலிதா வெளியேற்றிவிடுவார் என்று அதன்தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி அவரிடமே கேளுங்கள்.
மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பில்லை என்றவர், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெரும்என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications