பூகம்பம் .. கோவை கைதிகள் ரூ. 5000 நன்கொடை
கோவை:
கோவை மாவட்டத்திலிருந்து குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி மற்றும் உணவுப் பொருட்கள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை சிறைவாசிகள் ரூ. 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகஅளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ. 1. 5 கோடி ரூபாய் வரைசேர்ந்துள்ளது. இதில், லட்சுமி மில்ஸ் மற்றும் லட்சுமி குரூப் நிறுவனங்கள் ஆகியவை 50 லட்ச ரூபாய் அளித்தது.
அவிநாசிலிங்கம் மகளிர் நிகர் நிலைப் பல்கலைக் கழகம் 2.5 லட்ச ரூபாயும், ஒன்றரை லட்சம் மதிப்புள்ளஹார்லிக்ஸ், பிஸ்கட், உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
பேரூர் ஆதீனம், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக ரூ. 65 ஆயிரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியைச் சேர்ந்த எஸ்.ஆர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டரை லட்ச ரூபாய் நிதிவழங்கியுள்ளனர்.
கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் ஐந்தாயிரம் ரூபாயை பூகம்ப நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.