விவகாரமாகும் பெரியாறு அணை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க நிபுணர் குழு அளித்த பரிந்துரையை எதிர்த்து கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக, அம்மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் வி.பி.ராமகிருஷ்ண பிள்ளை கூறினார்.
அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக மாற்றியமைக்கும் நிபுணர் குழு பரிந்துரையை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. நிபுணர்குழுவை நியமிப்பது பற்றி மாநில அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.
மேலும், அணையின் உயரத்தை உயர்த்துவதால் ஏற்படும் சுற்றுப்புற விளைவுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என்று அவர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications