For Daily Alerts
Just In
ராமதாஸ் கூட்டத்தில் கல்வீச்சு .. பாண்டி.யில் பரபரப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள நெல்லித்தோப்புப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டத்தில் சிலர் கல்வீச்சில்ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லித்தோப்புப் பகுதியில் பா.ம.க. சார்பில் சனிக்கிழமை தொகுதி மாநாடு நடந்தது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கல்வீச்சில் இறங்கினர். அங்கு நின்று கொண்டிருந்த பா.ம.க.கொடி பொருத்தப்பட்ட வாகனம் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு இருந்த இருளைப் பயன்படுத்திக் கொண்டுஅக்கும்பல் தப்பி விட்டது.
இதையடுத்து அங்கு மோதல் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுஅமைதி நிலைநாட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 11, 2001, 5:30 [IST]