சுடப்பட்டார் சுபாஷ் கெய்சிங்
கொல்கத்தா:
டார்ஜிலிங் கோர்கா மலைக் கவுன்சில் தலைவரான சுபாஷ் கெய்சிங் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால்பலத்த காயமடைந்துள்ளார்.
டெல்லியிலிருந்து டார்ஜிலிங் செல்லும் வழியில் மலைப்பாதை வழியே கெய்சிங்கும் அவருடன் வந்தவர்களும்சென்ற கார் அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதனையடுத்து கெய்சிங் பாதுகாப்பு காரணங்களுக்காக அடையாளந் தெரியாத இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்க மறுத்த போலீசார் மிகவும் ஆபத்தான கட்டத்தில்இருப்பதை மறுப்பதற்கில்லை என்றனர்.
இச்சம்பவத்தில், அணிவகுப்பில் வந்த ஐந்து கார்களும் சேதமடைந்தன. உடன்வந்த போலீஸ் வாகனத்திற்குதீவைத்ததில் மூன்று போலீசார் படுகாயமடைந்தனர்.
சிலிகுரி மாவட்ட போலீஸ் அதிகாரியான அஜய் குமார் கூறும் போது சம்பவம் டார்ஜிலிங்கிலிருந்து 30 கி.மீ.தொலைவில் நடந்துள்ளது. அது ஒரு மக்கள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதி. மேலும் தாக்குதலை நடத்தியவர்கள்பயன்படுத்திய நவீன ஆயுதங்களின் மூலம் அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும்என்றார்.
80-களில் நேபாள மொழி பேசுவோர் நிறைந்த டார்ஜிலிங் மலைப்பிரதேசத்தை தனி மாநிலமாக்க வேண்டும்அல்லது கோர்க்காலாந்து என்ற பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிய கோர்காலாந்து தேசிய விடுதலைமுன்னணியின் தலைவராக இருந்தார் கெய்சிங்.
மூன்று புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து கோர்காலாந்து பிரச்சினையை மீண்டும் கிளப்பபோவதாக கோர்காலாந்து விடுதலை முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் சுடப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.