திமுக கூட்டணியை வீழ்த்துவோம் .. வீரமணி சபதம்
சென்னை:
தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள கட்சிகள் பொது எதிரியான பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என்று திராவிடக் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. பா.ம.க. தமிழகத்தில் அ.தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்ந்தது வரவேற்கக்கூடிய விஷயமாகும்.
மதச்சார்பற்ற கூட்டணியில் பா.ம.க.வின் வரவைக் கண்டு ஏற்கனவே உள்ள கட்சிகள் கலங்கத் தேவையில்லை. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில்மதச்சார்பாற்ற கூட்டணி பொது எதிரியான பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தும் வல்லமை படைத்தது.
மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமை சிதறாமல், சுயமரியாதைக்குப் பங்கம் வராமல், எடுத்த குறிக்கோளில் வெற்றிபெறும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications