சிறுவனை விழுங்கிய முதலை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
சிறுவனை விழுங்கிய முதலையை மலேசிய ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றனர்.
வெள்ளிக்கிழமையன்று மலேசியாவின் நியா தேசீயப் பூங்காவிற்கு அருகில் போர்னியா நதியில் குளித்து கொண்டிருந்த ஜாபா அனக் கனா என்ற 10 வயதுசிறுவனை முதலை ஒன்று விழுங்கியது. முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயன்ற அவனின் தாய் முதலையின் வாலால் தாக்கப்பட்டார்.
சிறுவனை விழுங்கிய பின் பல நூறு மீட்டர் தூரம் சென்ற முதலையை மலேசிய வீரர்கள் சனிக்கிழமையன்று கொன்றனர். இறந்த முதலையை வெட்டியகிராமவாசிகள் அதன் வயிற்றில் சிறுவனின் கை, கால் இருப்பதை கண்டனர்.
மலேசியாவின் புறநகர் நதிப்பகுதி கிராம மக்கள் நதியை நம்பி உள்ள நிலையில் இவ்வாறு நிகழ்வது சாதாரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications