வேலையைப் பறித்த பூகம்பம்
புவனேஸ்வர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு வேலை செய்து வந்த ஒரிசாவைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல்தவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஒரிசா மாநில இளைஞர்கள் பலர் ஜவுளி, நவரத்தினம், தங்கம் செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பலதொழிற்சாலைகளில் வேலை செய்து வருகிறார்கள்.
ஒரிசாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அகமதாபாத், சூரத், கட்ச் மற்றும் பல பகுதிகளில் வசித்து வேலை செய்து வந்தனர். ஒரிசாவிலுள்ள போலான்கிர்,பார்கார், காலாஹன்டி, பவுல்பானி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வேலை செய்து வருகிறார்கள்.
குஜராத்தில் பூகம்பத்தால் தங்கள் வேலை போய் விட்டதால் மீண்டும் ஒரிசாவிற்கே திரும்பி விட்டனர். இதே போல் தங்க, வைர, நவரத்தினதொழிற்சாலை ஊழியர்களும் வேலை பறிபோன ஏக்கத்தில் மீண்டும் தங்கள் சொந்த மாநிலமான ஒரிசாவுக்கே திரும்பி விட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரிசாவைச் சேர்ந்த நாராயண் சமந்தா ராய் கூறுகையில், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது நான் 3 வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தேன். பூகம்பம் ஏற்பட்டதால் அங்கிருந்து கீழே குதித்துத் தப்பித்து விட்டேன்.
இனிமேல் ஒரு மணிநேரம் கூட குஜராத்தில் இருக்க விரும்பவில்லை என்றார். இவரைப் போல் ஒரிசாவுக்குத் திரும்பி விட்ட மக்கள் யாரும்குஜராத்துக்கு மீண்டும் செல்ல மறுக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications