ரஜினி- தமிழ்க்குடிமகன் சந்திப்பு
பெங்களூர்:
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், தமிழக அமைச்சர் தமிழ் குடிமகனும்இணைந்து கோவா சென்றது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி அதிலிருந்து விலகி அ.தி.மு.க.கூட்டணியில் இணைந்தது. இதனால் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது தி.மு.க. தனது முன்னாள் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் தங்கள் கூட்டணியில்இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் தமிழக சட்டசபை சபாநாயகர் தமிழ் குடிமகன்ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், தமிழக அமைச்சர் தமிழ் குடிமகனும் ஒன்றாக கோவா சென்றது அரசியில்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை ரஜினி, தமிழ் குடிமகன் இருவரும் பெங்களூர் வந்தனர். அங்கிருந்து கோவா சென்றனர்.இவர்கள் தமிழகத்தின் அரசியில் சூழ்நிலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் கோவாவில் 10 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார். தமிழ் குடிமகன் திங்கள்கிழமை பெங்களூர் திரும்பிவருகிறார்.யு.என்.ஐ.