ஸ்டாலின் வழக்கு .. தீர்ப்பு நிறுத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள சென்னை மேயர் ஸ்டாலின் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை கோரிய மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி16 ம் தேதி வரை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக் குமார் நிறுத்தி வைத்துள்ளார்.

சமூக சேவகர் செண்பகமூர்த்தி தமது மனுவில், ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் கட்சி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்தார். அதற்காக அவர் பெற்ற தொகை மாதமொன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் மட்டுமே.

ஆனால், தற்போது அவர் வேளச்சேரியில் ஒரு பெரிய வீடும், நுங்கம்பாக்கத்தில் இரண்டு ஸ்நோ பவுலிங் சென்டர்களும் வைத்துள்ளதோடு தன் மகன்உதயாநிதி ஸ்டாலின் பெயரில் தொழில் நடத்தி வருகிறார். இவற்றின் மொத்த முதலீடு எட்டு கோடி ரூபாயாகும்.

அரசு ஊழியர் என்ற வகையில் அவர் தனது சொத்துக்களை பற்றியும் அவற்றை வாங்குவதற்கு பயன்படுத்திய வருவாய் ஆதாரங்களையும் தர வேண்டும்.தனது இந்த குற்றச்சாட்டுகளின மீது மாநில லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கோரியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+