சாவிலும் பிரியாத தம்பதி
Subscribe to Oneindia Tamil
கோவை:
நோயால் வாடிய மனைவியும், அவரது வயதான கணவரும் சாவில் இணைந்தே கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்து கொண்டனர்.
கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ள அரசமரத்துத் தோட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமிக் கவுண்டர் (83).இவரது மனைவி குப்பாத்தாள் (80). குப்பாத்தாளுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போய்விடும். இதனால்துன்பப்பட்டு வந்தார்.
ரங்கசாமிக் கவுண்டர், குப்பாத்தாள் படும் சிரமத்தைக் கண்டு வேதனையுற்றார். இந்த வேதனை இருவரையும்தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. இதனால் அவர்கள் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொள்ளமுடிவு செய்தார்.
இதன் படி இருவரும் தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் கிணற்றில் குதித்தனர். இதில் இருவரும் இறந்தனர்.இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications