For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழ் தீவிரவாதிகளுக்குத் தடை வருமா?
சென்னை:
தமிழர் மீட்புப்படை மற்றும் தமிழ் நாடு விடுதலைப்படை ஆகிய தீவிரவாத அமைப்புக்களைத் தடை செய்யுமாறு தமிழக அரசு வைத்துள்ள பரிந்துரை குறித்துமத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சந்தனக் கடத்தல் வீரப்பனை எப்படியும் போலீஸார் பிடித்து விடுவார்கள். தமிழக, கர்நாடக, கேரளபோலீஸார் தவிர மத்திய ரிசர்வ் போலீஸாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து நான் எதுவும் கூற முடியாது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய நளினிக்குபொதுமன்னிப்பு அளிக்க, தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பரிந்துரை செய்தது குறித்து கருத்துக் கூறுவதற்கில்லை என்றார் வித்யாசாகர் ராவ்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, February 12, 2001, 5:30 [IST]