பொலிவு பெறுகிறது அந்தமான்
சென்னை:
அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் பல தீவுகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணமும், சர்வதேசசுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலாவை அனுபவிக்கும் விதமாகவும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகலவலை மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ் சென்னையில் தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த தீவில் அடிப்படைவசதிகளை ஏற்படுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக உலக அளவில் டென்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் - நிக்கோபார் பகுதியில் மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இவற்றில் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகிறார்கள்.
சுற்றுலாவை மேம்படுத்த இந்த தீவுகளுக்கு கடல் போக்குவரத்தும். விமான போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. போயிங்விமானங்கள் வந்து இறங்கும் விதமாக இந்த தீவின் விமான நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications