For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்களிடம் சிக்கிய மனிதனை விழுங்கிய சுறா

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

மீன்பிடி படகில் மாட்டிய சுறாமீனின் வாயில் மனித எலும்புகள் இருந்ததாக மலேசிய மீனவர்கள் தெரிவித்தனர்.

தி நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் டெய்லி பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த தகவலில் சியா நாய் ஹுவா என்ற மீனவர் தெரிவித்ததாவது, பாங்கர் ரிசார்ட் தீவு அருகே,உலகிலேயே அதிக போக்குவரத்து நிறைந்த மலாக்கா நீரிணைப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு சுறாமீன மாட்டியது.

அதனை எந்திரத்தின் உதவியுடன் படகிலிருந்து குளிர்வறையில் வைக்க முயற்சிக்கும் போது அதன் வாயிலிருந்து மனித கால், மற்றும் கை எலும்புகள்வெளியே நீட்டிக்கொண்டிருந்தது என்றார்.

அந்த சுறாவை மீனவர்கள் போலீஸ் வசம் ஒப்படைத்த பின்னர் அதன் வயிற்றை கிழித்து உள்ளிருந்த மனித உடலின் எலும்புகளை மரபணு சோதனைக்காக(டி.என்.ஏ. டெஸ்டிங்)சேகரித்தனர் எனக்கூறியுள்ள அப்பத்திரிக்கை, கடந்த மே மாதம் முதல் ஒருவரை காணவில்லை என பாங்காக் நகர போலீசில் புகார்செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X