பூகம்பம் .. 2. 5மில்லியன் பவுண்டுகளில் கிராமம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 2. 5 மில்லியன் பவுண்டுகளில் புதிய கிராமத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்துசெவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இங்கிலாந்தில் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என்ற பெயரில் நிதி வசூல்நடத்தப்பட்டது. வசூலான பணத்தை வைத்து குஜராத் மாநில மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பூகம்பத்தால் பெரும் அழிவைச் சேர்ந்த கட்ச் மாவட்டம் பூஜ் நகரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த புதிய கிராமம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.

அகமதாபாத்திலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூஜ் நகரம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் புதிய கிராமம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. பூஜ்ஜில் வாழும் 7,000 மக்களின் நலனிற்காக இந்தப் புதிய கிராமம் உருவாக்கப்படவுள்ளது.

இந்தப் புதிய கிராமம் உருவாக்குவதற்காக வியாபாரிகள், சமுதாயத் தலைவர்கள், நிதி வசூல் அமைப்பாளர்கள் ஆகியோர் ஏற்கனவே 80,000பவுண்டுகள் நிதி வசூல் செய்து வைத்துள்ளனர்.

நிதி வசூல் செய்யும் பரூக் சுபேதார் கூறுகையில், குஜராத் பூகம்ப நிவாரண நிதி வசூல் நடத்தி வருகிறோம். நிவாரண நிதி நாளுக்குநாள் அதிகரிப்பது குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு உதவும். நீண்ட கால திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 2, 500 பவுண்டுகள்என்ற அளவில் 1,000 வீடுகள் கட்டிக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+