வீரப்பன் விவகாரத்தில் உண்மை வெளிவருமா?
கோவை:
தி.மு.க. அரசு பதவியிலிருந்து விலகிய பின்பே மக்களுக்கு வீரப்பன் விஷயம் குறித்த உண்மைகள் தெரியவருமென பிரபல பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டிளித்த அவர் கூறியதாவது:
ஆரம்பம் முதலே தமிழக அரசு வீரப்பன் விவகாரத்தில் உண்மைகளை வெளியிடவில்லை. அவர்கள் கூறுவதில்சிறிதளவு கூட உண்மையில்லை.
தமிழக, கர்நாடக அரசுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. வீரப்பன் கும்பலிடமிருந்து கைப்பற்றிய டிஜிடல்டைரியிலிருந்து நம்பர்களை தமிழக போலீசார் அழித்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் மெளனம் சாதிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.பா. ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.அதனால் தான் அவர் த.மா.கா. வை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறார் என்றார் சோ.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications