நடிகையைக் கடத்திய டி.எஸ்.பி.க்கு சிறை
சென்னை:
நடிகை ஜெயகுமாரியை கடத்தியது மற்றும் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக போலீஸ் அதிகாரி உள்ளிட்ட இருவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல்தண்டனை வழங்கி சென்னை முதன்மை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஜெயகுமாரியும் அவரது கணவரும் தன்னிடம் 6 லட்ச ரூபாய் அளவுக்கு பணமோசடி செய்ததாக பாலசுப்ரமணியன் என்பவரின் கார் டிரைவர் கொடுத்தபுகாரின் அடிப்படையில் அவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தார் சி.பி.சி.ஐ.டி.யின் முன்னாள் டி.எஸ்.பி. வேணுகோபால் ராஜ்.
அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களிடம் வெற்றுப்பேப்பரில் கையெழுத்தை மிரட்டி வாங்கியுள்ளார். நடிகையையும் அவரதுகுடும்பத்தாரையும் டி.எஸ்.பி.யின் உதவியோடு பாலசுப்ரமணியன் மீண்டும் கடத்தி அடைத்து வைத்திருந்தார்.
அங்கிருந்து தப்பிய நடிகை மற்றும் குடும்பத்தினர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிக்கும், மற்றொருவருக்கும் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக மார்ச் 12 வரை இத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications