For Quick Alerts
For Daily Alerts
Just In
ரூ. 6.16 கோடி கஞ்சா பிடிபட்டது
சென்னை:
தமிழகத்தில் தேனி, ஈரோடு மற்றும் மதுரையில் நடந்த வெவ்வேறு சோதனைகளில்போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரூ 6.16 கோடி மதிப்புள்ள கஞ்சாசெடிகளையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
30,700 கிலோ எடையுள்ள ரூ 6.14 கோடி மதிப்புள்ள கஞ்சா செடியும், 19 கிலோஎடையுள்ள ரூ 1.9 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.
கஞ்சா செடிகள் 9.75 ஏக்கர் பரபப்ளவில் ஈரோட்டிலும், மேற்கு தொடர்ச்சிமலைகளுக்கு அடுத்த தேனி மாவட்டத்திலும் பயிரிடப்பட்டிருந்தன.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பயிரிட்டவர்களை தேடும் பணிநடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது..
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]