காஷ்மீர் தேர்தலில் வன்முறை ண்
பாரமுல்லா(காஷ்மீர்):
காஷ்மீரின் வடக்கு பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கியதால் மத்திய ரிசர்வ் படை வீரர்ஒருவர் உயிரிழந்தார். சப் இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
பாரமுல்லா மாவட்டத்தின், டார்ஜூ பகுதியில் ஒரு பள்ளியில் செயல்பட்ட தேர்தல் அலுவலகத்தின் மீதான தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் தேர்தல்அலுவலர் படுகாயமடைந்தார்.
பாதுகாப்பு படையினர் திருப்பிச் சுட்டபோதும் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். எனினும், தீவிரவாதிகளை தேடும் பொருட்டு அப்பகுதி முழுவதும்சீலிடப்பட்டு தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
தேர்தலை நடத்த தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதனை மீறி தேர்தலை நடத்தியதால் இத்தாக்குதல் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களில் 2தேர்தல் அலுவலகங்களை தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர்.
குப்வாரா மாவட்டத்தில் 20 தொகுதிகளுக்கு 45 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் பிப்ரவரி 24ல் நடைபெறுகிறது. கேரன், கர்னா,தீத்வால் பகுதிகளில் ஜனவரி 15ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications