நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல .. நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

மானாமதுரை:

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த நடிகர் ராஜ்குமார் மீட்பு மனித நேய பயண விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு நெடுமாறன்பேசியதாவது:

நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திய போது கர்நாடகத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தைமனிதநேயத்துடன் அணுகாமல் அரசியல் ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயன்றது வேதனைக்குரியது.

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல. நாங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்தான். இல்லையென்று கூறவில்லை. வீரப்பனைப் பிடிப்பது சட்டம் - ஒழுங்குபிரச்சனையல்ல. சமூக பொருளாதார பிரச்சனை.

வீரப்பனைப் பிடிப்பதற்காக இதுவரை ரூ 170 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதை சத்யமங்கலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின்வாழ்க்கைத்தரம் உயரச் செலவிட்டிருக்கலாம். வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க முன்வாருங்கள். நான் காட்டுக்குச் சென்று வீரப்பனை அழைத்துவருகிறேன் என்றார் நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+