மணிப்பூர் முதல்வர் பதவி விலகினார்
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூர் முதல்வர் நிபாமாச்சா சிங் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வேத் மார்வாவிடம் செவ்ாய்க்கிழமை மாலைசமர்ப்பித்தார். இதையடுத்து மாநில சமதா கட்சித் தலைவர் ராதா பினோத் கொய்ஜாம்அடுத்த முதல்வராகிறார்.
அடுத்த அரசை அமைக்க ஆளுநரிடம் ராதா பினோத் சார்ந்துள்ள ஐக்கிய ஜனநாயககூட்டணி உரிமை கோரியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் எதிர் கட்சியைச் சேர்ந்த 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்எதிர் கட்சியிலிருந்து விலகி நிபாமாச்சா சிங்கின் மணிப்பூர் மாநில காங்கிரசில்இணைந்தனர்.
அதன்பின்பு ஏற்பட்ட உடன்பாட்டின் படி நிபாமாச்சா சிங் பதவியிலிருந்து ராஜினாமாசெய்து சமதா கட்சியின் ராதா பினோத் கொய்ஜாம் அரசு அமைக்க வழி வகுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications