காஞ்சி. கோவிலில் சசிகலா பூஜை
காஞ்சிபுரம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா காஞ்சி காமாட்சி அம்மன்கோவிலில் வழிபாடு செய்த பின் காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா திங்கள்கிழமை காலை காஞ்சி காமாட்சிஅம்மன்கோவிலுக்கு வந்தார். அவர் தன்னுடன் சீல் வைக்கப்பட்ட அட்டை பெட்டியையும்கொண்டு வந்தார். அந்த அட்டை பெட்டி அம்மன் சன்னிதியில் வைத்து பூஜைசெய்யப்பட்டது. பின் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் அட்டை பெட்டியுடன் காஞ்சி சங்கர மடத்துக்கு சென்றார் சசிகலா. அங்குஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமியையும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதியையும் சந்தித்து 45நிமிட நேரம் பேசினார். அவர்களிடம் அட்டை பெட்டியை கொடுத்து ஆசி பெற்றார்.
அதன் பின் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முக்தி அடைந்தசமாதிக்கு சென்று வழிபட்டார்.












Click it and Unblock the Notifications