கோவையில் போலீஸ் உளவாளிக்குக் கத்திக் குத்து
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவையில், போலீஸிற்கு தகவல் கொடுப்பவர் என்று கூறி ஒருவரை தடை செய்யப்பட்ட அல்உம்மாதீவிரவாதிகள் கத்தியால் குத்தியுள்ளனர்.
முஸ்லீம்கள் நிறைந்த கோட்டைமேடு பகுதியில், வின்சென்ட் ரோட்டில் இந்த சம்பவம் நடந்தது. கத்தியால்குத்தப்பட்டவர் பெயர் முகமது யூனுஸ். அல்உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரைக் கத்தியால் குத்தியதில்,மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யூனுஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் கூறுகையில், தீவிரவாதிகளின் ஹிட்லிஸ்ட்டில் இருந்தயூனுஸை கொல்வதற்கு பதில் கடந்த 20ம் தேதி உக்கடம் பகுதியில் அப்பாஸ் என்பவரை தவறாக கொலைசெய்துள்ளனர் என்றனர்.
கத்திக் குத்துச் சம்பவத்தை அடுத்து கோட்டைமேடு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications