நாடாளுமன்றத்திற்கு சொத்தை எழுதி வைத்த மூதாட்டி
Subscribe to Oneindia Tamil
வியன்னா:
89 வயதான ஆஸ்திரிய நாட்டு மூதாட்டி ஒருவர் தனது சொத்து முழுவதும்ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என உயில் எழுதிவைத்துள்ளார்.
மார்கரேதா லுபென் என்ற அந்த மூதாட்டி இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துபோனார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய உயிலில், தனக்கு வாரிசு ஏதும் இல்லாதகாரணத்தால் தனது 1.21 மில்லியன் டாலர் சொத்து நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என எழுதி வைத்திருந்தார்.
இந்த பணம் கலை , கலாச்சார துறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவபயன்படுத்தப்படும். இதற்கென மார்க்ரேதா லூபென் நாடாளுமன்ற ஜனநாயகஅமைப்பு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை ஆஸ்திரியநாடாளுமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications