அஸாரூதின் மனுவிற்கு கிரிக்கெட் வாரியம் பதில்
ஹைதராபாத்:
ஆயுள்தடையை எதிர்த்து அஸாரூதின் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுவை இந்திய கிரிக்கெட் வாரியம் புதனன்று தாக்கல் செய்தது.
வாரியத்தின் சார்பாக டெல்லி வக்கீல் நரோத்தம் ரெட்டியும், வக்கீல் திருமதி. ராதா ரங்கநாதனும் மனுவை தாக்கல் செய்தனர். வாரியத்தின் செயலர்சரத் திவாகரும் உடனிருந்தார்.
வாரியம் பதில் மனு தாக்கல் செய்தாலும், வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையாவும் வாரிய விசாரணைக்குழு தலைவரான முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர்கே.மாதவனும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 26 வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். இதனை நீதிபதி சியாம் சுந்தர ராவ்ஏற்றுக்கொண்டு பிப்ரவரி 26 வரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசமளித்தார்.
வாரியத்தின் சார்பாக பதில் மனுவை தாக்கல் செய்த ரெட்டி, ஆயுள்தடை விதிக்கும் வாரியத்தின் முடிவு சரியே என்பதை தெரிவித்திருப்பதாக கூறினார். வேறுவிபரங்கள் எதுவும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications