யோசித்து முடிவெடுங்கள் .. ப.சிதம்பரம் அறிவுரை
சென்னை:
எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தாலும் அல்லது மூன்றாவது அணிஅமைப்பதாக இருந்தாலும் கட்சியின் குறிக்கோளையும், கொள்கையையும் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா.தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
சிதம்பரத்தின் இந்த கருத்து சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார் தலைமையில் நடந்தத.மா.கா. தேர்தல் கூட்டணி கூட்டம் முடிந்த பின் தெரிவிக்கப்பட்டுள்ளதுமுக்கியத்துவம் பெறுகிறது.
.சிதம்பரம் தன் கருத்தை கையால் எழுதிய கடிதத்தின் மூலம் மூப்பனாருக்குஅனுப்பியுள்ளார். சிதம்பரம் சில காலமாக கட்சியின் முக்கியமான கூட்டங்களில் கூடகலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது தேர்தல் நெருங்குகிறவேளையில்,முக்கிய கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
த.மா.கா.வுககு முன்னால் மூன்று வாய்ப்புகள் உள்ளன. அ.இ.அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் சேரலாம், அல்லது தி.மு.க. தவைமையிலானகூட்டணியில் சேரலாம். அல்லது மூன்றாவது அணி அமைக்கலாம். ஆனால் இதில்எதை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து எந்த கருத்தும் நான் கூற விரும்பவில்லை.
ஆனால் எந்த முடிவு எடுத்தாலும், கட்சியின் குறிக்கோள், கொள்கையை கருத்தில்கொண்டு எடுக்கப்பட வேண்டும். இந்த கருத்துக்களை நான் தலைவர் மூப்பனாரிடம்வலியுறுத்தி கூறியுள்ளேன் என கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் மூப்பனார் எந்த முடிவெடுப்பதானாலும் விரைந்துமுடிவெடுக்க வேண்டும். அப்போது தான் தொண்டர்களை அதற்கேற்றாற் போல்செயல்பட வைக்க முடியும் என வலியுறுத்தி கூறியிருந்தார் சிதம்பரம். ஆனால் இந்தகருத்து மூப்பனாரால் கவனிக்கப்படவில்லை.
சிதம்பரம் உள்ளிட்ட த.மா.கா.வினர் சிலர் அ.தி.மு.கவுடனான தேர்தல் கூட்டணியைஎதிர்த்து வருவதாக கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.
1996-ம் ஆண்டுஅ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்துதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications