எல் சால்வடேரில் பூகம்பம் .. 127 பேர் பலி
சான் சால்வேடர் (அமெரிக்கா):
எல் சால்வடேர் நாட்டின் தலைநகர் சான் சால்வேடரில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட பூகம்பத்தில் 127 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர்படுகாயமடைந்தனர்.
தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதி நாடான எல் சால்வடேர் தலைநகர் சான் சால்வேடரில் ஒரு மாதத்திற்கு முன்பு 6.2 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டநிலநடுக்கத்தில் 844 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சான் சால்வேடர் மாநிலத்தில் உள்ள லா பாஸ், கஸ்கட்லான் மற்றும் சான் விஸைன்ட் ஆகிய 3 மாவட்டங்களில்உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருட்டுகளை தடுக்க இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ...: இந்தோனேசியாவின் தென் கடற்கரை பகுதிகளில் செவ்வாயன்று லேசான பூகம்பம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு சுமத்ராதீவுகளில் அமைந்துள்ள நகரங்களை பாதித்ததாக ஆஸ்திரேலிய பூகோளவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.
செவ்வாயன்று பகல் 12-58 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 400கி.மீக்கு மேற்கே கடலில் மையம் கொண்டிருந்தது. இப்பகுதிகளில்நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. சில நேரங்களில் அதன் பாதிப்பு அதிகளவில் இருக்கும்.
இந்தியாவில் ...: இந்தியாவின் கேரள மாநிலத்திலும் செவ்வாய்க்கிழமை இரவு லேசான பூகம்பம் இருந்தது. கோட்டயம் மற்றும் கொல்லம்மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
செவ்வாயன்று காலை 7 மணி முதல் 10 மணி வரையான நேரத்தில் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளிலிருந்த பாத்திரங்கள்உருண்டதோடு பல வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
கோட்டயம் பகுதியில் அதிகாலை 2-30 மணியளவிலும், பின் காலை 8-15 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications