வீரப்பன் கூட்டாளி "துப்பாக்கி சித்தன் விடுதலை
கோபி:
அதிரடிப்படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளி துப்பாக்கிச் சித்தன் மற்றும் அவனது மனைவி கும்பி ஆகியோர்விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இரண்டு பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு வீரப்பனைத் தேடி போலீசார் காட்டுக்குள் வேட்டை நடத்தினர். அப்போது காட்டில் ஒரு கும்பலை கண்ட அதிரடிப்படையினர் அவர்களைவிரட்டிச் சென்றபோது அவர்கள் அதிரடிப்படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது பதிலுக்கு அதிரடிப்படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இறுதியில், துப்பாக்கிச் சித்தன், சிக்குமாத்தி என்ற கும்பி, சித்தனின் தம்பிமகாதேவன், ஜெயராமன், சுரேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
துப்பாக்கிச் சித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தான். இந்த வழக்கை பவானி நீதிமன்ற நீதிபதி நூர் அகமது விசாரணை செய்தார். அவர் அளித்ததீர்ப்பில், துப்பாக்கிச் சித்தன் மற்றும் அவனது மனைவி சிக்குமாத்தி உட்பட 3 பேரை விடுதலை செய்தார்.
மகாதேவன், ஜெயராமன் ஆகியோருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். துப்பாக்கிச் சித்தன் மற்றும் அவனது மனைவி சிக்குமாத்திஆகியோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications