For Daily Alerts
Just In
கட்ச்சில் மீண்டும் நில நடுக்கம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் தொடர்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு 6 முறை நிலநடுக்கம்ஏற்பட்டது.
இந்திய பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் புதன்கிழமை இதுகுறித்துக் கூறியதாவது:
கட்ச் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை 5.01 மணிக்கு 3.0 மற்றும் 3.6 என்ற ரிக்டர்அளவுகள் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்ச் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று ஏற்பட்டபூகம்பத்துக்குப்பின் இதுவரை 314 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, புதன்கிழமை காலை 9.26 மணிக்கு 3.3. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்றுதெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 14, 2001, 5:30 [IST]