இவான் லென்டிலுக்கு புதிய கெளரவம்
புளோரிடா:
முன்னாள் டென்னிஸ் வீரர் இவான் லென்டில், சர்வதேச டென்னிஸின் புகழ்மிக்கோர் அரங்க உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டென்னிஸ் உலகில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த அரங்கம்.இவ்வரங்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொருவர் ஆஸ்திரேலியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வீரர்மெர்வின் ரோஸ்.
தொடர்ந்து 270 வாரங்கள் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரராக திகழ்ந்த லென்டில் பெற்ற 94 பட்டங்களில்இடம் பெறாதது விம்பிள்டன் பட்டம் மட்டுமே.
தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த லென்டில் இது தனக்களிக்கப்பட்ட, ஒவ்வொரு டென்னிஸ்வீரரும் அடைய விரும்புகின்ற கெளரவமாகும் என்றார். அதற்கான விழாவில் பங்கு பெற ஆர்வமுடன் உள்ளதாககூறும் முன்னாள் செக்கோஸ்லோவேகியா வீரரான லென்டில் தற்போது அமெரிக்காவில் குடியிருந்து வருகிறார்.
புகழ்பெற்ற வீரர்கள் பலர் ஏதாவதொரு பட்டத்தை வெல்லாமல் இருப்பது சகஜமான ஒன்று. ஜான்மெக்கன்ரோவிற்கு கிடைக்காதது பிரெஞ்ச் ஓபன் பட்டம் (மெக்கன்ரோவின் கடைசி பிரெஞ்ச் ஓபன் பட்ட கனவைதகர்த்தவர் லென்டில்), லென்டிலுக்கு விம்பிள்டன் பட்டம் , தற்போதைய பீட் சாம்ப்ராஸிற்கு இதுவரைகிடைக்காதது பிரெஞ்ச் ஓபன் பட்டம்.
ஆஸ்திரேலியாவின் மெர்வின் ரோஸ் 50களில் ஆஸ்திரேலியாவிற்கு டேவிஸ் கோப்பையை பெற்றுத் தந்தவர்.அவர் 90 களில் சர்வதேச அரங்கில் மீண்டும் அதிகம் அறியப்பட்டதற்கு காரணம் அவருடைய சிஷ்ய கோடிஸ்பெயினின் அரன்ட்ஸா சான்ஸெஸ் விகாரியோ. ரோஸின் பயிற்சியில் விகாரியோ 90களில் பட்டங்கள் பலவென்றார்.
ஜூலை 14ல் நியூ போர்ட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் லென்டிலும், ரோஸும் சர்வதேச டென்னிஸ் புகழ்மிக்கோர்அரங்கில் இணைத்துக் கொள்ளப்படுவர்.












Click it and Unblock the Notifications