இலங்கை நிர்வாகம் சரியில்லை .. சந்திரிகா
கொழும்பு:
இலங்கையில் நிர்வாகத் துறையில்40 சதவீதம் ஊழல் நடக்கிறது என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடந்த மூத்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சந்திரிகா குமாரதுங்காகூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஊழல் நடக்கிறது. நிர்வாகத்துறையில் உள்ள அரசு அதிகாரிகள் பணத்தைசுரண்டுகிறார்கள்.
நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு அதிக அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும் சுரண்டலை ஒழிக்க முடியவில்லை. நிர்வாகத் துறையில் நடக்கும்ஊழலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இது குறித்து நவம்பருக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பல முறை ஊழல்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கும் படி கூறி வந்தும், இதுவரை ஒருவர் மேல் கூட ஊழல்வழக்குத் தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.