சீனியரை வெற்றி பெற வைத்த கங்குலி
சென்னை:
சென்னையில் செவ்வாய்க் கிழமையன்று நடைபெற்ற சாலஞ்சர் சீரிஸின் 2வது போட்டியில் இந்திய சீனியர் அணி,இந்திய பி அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சீனியர் அணியின் கேப்டன் கங்குலி பேட்டிங்கின் போது சதமடித்ததோடு (142 ரன்கள்) பெளலிங்கின்போது 2விக்கெட்டுகளை எடுத்தார். ஆஷிஷ் நெஹ்ராவின் பந்தில் சச்சினை அவுட் ஆக்கியவரும் கங்குலியே.
393 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய பி அணியில் சச்சின் அடித்த 77 ரன்களுடன் , அணியின் கேப்டன் மற்றும்தினேஷ் மோங்கியா இணைந்து 5வது விக்கெட்டிற்கு எடுத்த 152 ரன்கள் அந்த அணி வெற்றி பெறக்கூடும் என்றுநினைக்க வைத்தது. எனினும், ராபின்சிங் ரன் அவுட்டான பிறகு அந்த அணி கடைசியில் 46.4 ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 361 ரனகள் மட்டுமே எடுத்தது.
புதன் கிழமையன்று நடைபெறும் 3வது போட்டியில் இந்திய ஏ அணி, இந்திய பி அணியை எதிர்கொள்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications