10 இடங்களில் வெற்றி .. கூறுகிறது தெலுங்கர் கட்சி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று திராவிடர் தெலுங்கர்முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவதா அல்லது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவதா என்பது குறித்து எந்த முடிவும்எடுக்கப்படவில்லை. நாங்கள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி எதுவும் கிடையாது
தேர்தல் கூட்டணி பற்றி முடிவு எடுப்பது தாமதாவது தமிழ் மாநில காங்கிரஸ் தங்கள் முடிவை அறிவிக்க தாமதப்படுத்துவதால்தான். எங்கள் கட்சி தனித்துபோட்டியிட்டால் கூட 10 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அந்த தொகுதிகளில் 50 சதவிகிதம் தெலுங்கு மக்களின் ஓட்டுஉள்ளது.
கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்கு நாங்கள் கேட்டுக் கொண்டது போல் தெலுங்கு கங்கா குடிநீர் திட்டம் என்று பெயர் வைக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எங்கள் கட்சியின் சக்தியை காட்ட இந்த மாதம் 17-ம் தேதி கட்சியின் இளைஞர் அணியின் மாநில மாநாடு மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.