For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சியில் போதைப் பொருட்கள் அழிப்பு
திருச்சி:
திருச்சியில் சுங்க இலாகா அதிகாரிகள் 71.763 கிலோ போதைப் பொருட்களை புதன் கிழமை அழித்தனர்.
இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சமீபத்தில் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட 9 பேரிடமிருந்துஇரண்டு கிலோ ஹெராயின் உள்பட மொத்தம் 71.763 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இவைதற்போது அழிக்கப்பட்டுள்ளன. உலகச் சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ 2 கோடியாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுங்க இலாகவினாரால் 123 கிலோ ஹெராயின், 349 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 15, 2001, 5:30 [IST]