வாக்காளர் பட்டியல் முறைகேடு .. விசாரணை கேட்கிறது கம்யூ.
பாண்டிச்சேரி:
வாக்காளர் பட்டியல் திருத்தி அமைப்பது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் சி.பி.ஐ மாநில செயலாளர் நா.ரா. கலைநாதன் கூறுகையில், ரெட்டிபாளையம் தொகுதியிலிருந்து 10,991 வாக்காளர் பெயர்கள்நீக்கப்பட்டுள்ளன. 3,729 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் செய்யப்பட்டது போல் இந்த முறையும் தேர்தல் வரை வாக்காளர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படவேண்டும்.
தவளகுப்பத்தில் புதன்கிழமை தொண்டர்கள் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் வன்முறையில்ஈடுபட முயன்றவர்களிடம் சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பவம் தவறான முறையில் கையாளப்பட்டது எனகூறினார்.
யு.என்.ஐ.