பாண்டியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
பாண்டிச்சேரி:
வாக்காளர் பட்டியல் திருத்தி அமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுவது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட விருப்பாதாகபாண்டிச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கும் பணி நடந்த போது 8 தொகுதிகளிலிருந்து 15முதல் 25 சதவிகிதம் பேரின் பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இதில் சந்தேகம் ஏற்பட்டு வீடு வீடாக சென்று விசாரித்த போது, இறந்தவர்கள், போலியான பெயர்கள், இடம் மாறி சென்றவர்கள் பெயர்களும்இடம் பெற்றிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.
தேர்தல் ஆணையம் புதிதாக வீடு மாறிச் சென்றவர்கள் தாங்கள் வீடு மாறியதற்கான ஆதாரத்தை கொடுத்து தங்கள் பெயர் நீக்கபட்டிருந்தால் அந்ததவறை சரி செய்து கொள்ளுமாறு கூறியிருந்தோம். அதற்கு தேவாையன கால அவகாசமும் கொடுத்திருந்தோம்.
மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் புதிதாக தேர்தல் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிதொடங்கப்படவுள்ளது.
அடையாள அட்டை வழங்கப்படாமல் விடுபட்டு போனவர்களும், அடையாள அட்டை காண வில்லை என்று கூறியவர்களுக்கும் வாக்காளர் அடையாளஅட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications