For Daily Alerts
Just In
அல் உம்மா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
விவசாயிகளுக்கு ஆதரவாக அல் உம்மா இயக்கத்தின் பெயரில் காட்பாடி, திருவண்ணாமலை ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றுவந்த தகவலை அடுத்து இந்த ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ரயில் நிலைய அதிகாரிக்கு தபால் கார்டில் ஒரு கடிதம் வந்தது. அதில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். அவர்களிடம் மோசடிநடக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டு அல் உம்மா இயக்கம் வாயை மூடிக் கொண்டு இருக்காது.
எனவே வரும் 20 ம் தேதிக்குள் திருவண்ணாமலை, காட்பாடி ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் நிலைய போலீஸ் அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
Story first published: Friday, February 16, 2001, 5:30 [IST]