நோய் தடுப்பு முகாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யுனிசெப் நோய் தடுப்புமுகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன் வறட்சி ஏற்பட்டது. அப்போது மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தவறட்சியையெல்லாம் தாண்டி தற்போது மீண்டு வந்துள்ள குஜராத் மாநிலம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழும் மக்கள் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும்குழந்தைகளை ஆங்காங்கே காண முடிகிறது.

இதனால் யுனிசெப் (ஐ.நா.குழந்தைகள் நல சம்மேளனம்) சார்பில் குழந்தைகளுக்கு நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் படி நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது.

இதனால் குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் ஊசி போடுதல் மற்றும் மருந்துகள்கொடுத்தல் போன்றவற்றைச் செய்ய யுனிசெப் முன்வந்துள்ளது.

5 வயதுக்கும் குறைவான உள்ள குழந்தைகளை தொற்றுநோய் விரைவில் தொற்றிக் கொள்ளும். இவர்களைப் பாதுகாக்க முதலில் நடவடிக்கைகள்மேற்கொள்ள யுனிசெப் திட்டமிட்டுள்ளது. அதன் படி முதல்கட்டமாக 14,000 குழந்தைகளுக்கு தொற்றுநோய் தடுப்பு ஊசி போடப்படும்.

இதற்காக யுனிசெப் அமைப்பின் 80 குழுக்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இனம் கண்டறிந்து தொற்று நோய்த் தடுப்புமருந்துகளைக் கொடுப்பார்கள். 80 குழுக்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இருப்பார்கள்.

குறைந்தது 4, 00,000 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தொற்று நோய் தடுப்பு ஊசிகள் போடவும் யுனிசெப் திட்டமிட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+