இன்று தி.மு.க.பொதுக்குழு கூடுகிறது
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
பொதுக்குழுக் கூட்டத்தில் வரும் சட்டசபைத் தேர்தல், கூட்டணி முடிவுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமகவிலகி அ.தி.மு.க வுடன் இணைந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடாத நிலையிலும் கூட அ.தி.மு.க சார்பில் வேட்புமனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுமுடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தி.மு.க பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடுகிறது. முதல்வர் கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமைவகிக்கிறார்.
பொதுக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக மூப்பனார் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க தொண்டர்களுக்கும், அமைச்சர்களுக்கும்இடையே பல கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொண்டர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிராகப் புகார்கள் கூறத் தயாராகஇருப்பதாகவும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை கூடும் பொதுக்குழுக் கூட்டம் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.