கனடா குடியேற்றத் துறை - ஆராய வரும் எம்.பி.க்கள் குழு
Subscribe to Oneindia Tamil
டொராண்டோ:
இந்தியாவில் உள்ள கனடா குடியேற்றத் துறையின் செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுஇந்தியாவிற்கு வருகிறது.
இது குறித்து கனடாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் ஓபராய் எம்.பி. (கனடா அலயன்ஸ் கட்சி) தெரிவித்ததாவது, இந்தியாவிலிருந்துகனடாவிற்கு அதிகளவில் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். அதற்கு தேவையான அளவில் சண்டிகர், மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளகனடாவின் குடியேற்றத் துறையின் செயல்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து அறிய விரும்புகிறோம்.
தேவைப்பட்டால் அதிக வசதிகள் அளிக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் வற்புறுத்துவோம். கனடாவில் குடியுரிமை பெற வசூலிக்கப்படும்தொகையானது பொது நிதிக்கு சென்று விடுவதால் குடியுரிமைத்துறைக்கு அது நேரடியாக பலனளிப்பதில்லை எனத் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications