தலித் இட ஒதுக்கீடு .. கருணாநிதி மீது ஜெ.புகார்
சென்னை:
தமிழக அரசுப் பணியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுபற்றிய அரசின் உத்தரவை செயல் படுத்துவது குறித்து ஆலோசனை அளிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படுவதாகதமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருப்பது தேர்தல் நேர ஸ்டண்ட் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்ததாவது:
தலித்துகளின் நலன்களில் அக்கறை செலுத்தாத கருணாநிதி தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு இவ்வாறுதெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றமே அனுமதித்து விட்ட ஒரு அரசாணையை செயல் படுத்துவது குறித்த விசாரிக்கஒரு கமிட்டி அமைப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு மேற்பட்ட ஒரு அமைப்பைஉருவாக்க விரும்புவது போல் உள்ளது.
தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் தி.மு.க. அரசு அதிக நன்மை செய்திருப்பதாக கூறும் கருணாநிதிபழங்குடியினர் நல மேம்பாட்டிற்கு இதுவரை மத்திய அரசு அனுமதித்த 78.41 கோடி ரூபாயில் 86 லட்ச ரூபாயைமட்டுமே பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.