காஷ்மீர் பிரச்சனை தீருமா?
துபாய்:
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வாஜ்பாய் தவிர வேறு எந்த இந்தியத் தலைவராலும் முடியாது. அதனால் வாஜ்பாய்முயற்சி செய்து காஷ்மீர் பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாகிஸ்தான்முன்னாள் பிரதமர் அப்துல் கயாம் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் அப்துல் கயாம் கூறுகையில், காஷ்மீரில் பல்லாண்டு காலமாகசண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையைத் தீர்த்து வைக்க இந்திய பிரதமர் வாஜ்பாயால் மட்டுமே முடியும்.அதாவது வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருக்கும் போதே காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் மிகவும் ஆர்வமுடையவர் வாஜ்பாய். அதனால்தான் அவர் ரம்ஜான்மாதத்தின் போது காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார். அதே போல் அதை அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டித்தார். சண்டை நிறுத்தம் காஷ்மீர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் இந்நாளில் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை குறைந்ததோடு மட்டுமல்லாமல்,தீவிரவாதிகளின் தாக்குதலும் குறைந்திருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானும் முடிந்த அளவு தாக்குதலைக்குறைத்துள்ளது. ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்கள் பாகிஸ்தான் வந்து காஷ்மீர் பிரச்சனை உள்பட பலபிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதி அமைப்பின் தலைவர் சையத் சலாவூதின் கூட வாஜ்பாயின் சண்டை நிறுத்தமுயற்சியைப் பாராட்டியிருக்கிறார். இதனால் கண்டிப்பாக தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் இந்தியப்பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் அப்துல் கயாம்.
ஐ.ஏ.என்.எஸ்