இலங்கை உதவிக்கரம்
கொழும்பு:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை அதிபர் 1000 டாலர்கள் மதிப்புள்ள காசோலையை இலங்கைக்கான இந்தியத் தூதர்கோபாலகிருஷ்ண காந்தியிடம் கொடுத்தார்.
மேலும் குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடை ஆகியவைகள்வழங்குவதற்கும் இலங்கை ஏற்பாடு செய்யும் என்றும் உறுதி அளித்தார்.
இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவிக்கிறது. இலங்கையிலுள்ள 20 தொழிற் சாலைகளிலிருந்து 1,00,000 ஆடைகள் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுதவிர விரைவில் கெட்டுப் போகாத உணவு வகைகள், பால் பவுடர் பாக்கெட்டுகள் ஆகியவையும் குஜராத்துக்கு இலங்கை சார்பில் அனுப்பிவைக்கப்படும். ஏற்கனவே தேயிலை பொடியை குஜராத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இலங்கையிலிருந்து அனுப்பப் படும் நிவாரணப் பொருட்களை இலவசமாக குஜராத்துக்குக் கொண்டு செல்வதாகஅறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications