லண்டனுக்கு அதிகம் தேவைப்படும் இந்திய நர்சுகள்
லண்டன்:
லண்டனின் மிகப்பெரிய மருத்துவ நிர்வாகமான பியூபா (பிரிட்டன் யுனைடெட் பிராவிடன்ட் அஸோஸிஸேன்) மருத்துவ சேவைக்காக 1500 இந்திய நர்ஸ்களைதேர்ந்தெடுக்க உள்ளது.
இங்கிலாந்தின் பதிவுபெற்ற நர்ஸ்களுக்கு இணையான தகுதியுடைய இந்திய நர்ஸ்களுக்கு 16, 500 பவுண்டுகள் முதல் 18, 000 பவுண்டுகள் மாத ஊதியம் தரஇந்நிறுவனம் முன்வந்துள்ளதாக இதன் மேலாளர் ராப் வாக்கர் தெரிவிக்கிறார்.
பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வழக்கமாக நர்ஸ்கள் தேர்வு செய்யப்படுவர். இம்முறை இந்திய நர்ஸ்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். 2ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணமும் அளிக்கப்படும். அத்துடன் தங்குமிட செலவினை இணைத்து ஊதிய உயர்வு பின்அளிக்கப்படும் என வாக்கர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரிவுகளுக்கான வேலை வாய்ப்பிற்கு இந்தியாவிலிருந்து வல்லுநர்களை பிரிட்டன் தேர்வு செய்து வருகிறது. இதற்கு முன்னர் 40 ரயில்வேபொறியாளர்களை இந்தியாவிலிருந்து பிரிட்டனின் ஜார்விஸ் ரயில் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்காக லீசெஸ்டர் நிறுவனம் ஒன்று 120ஆசிரியர்களை 20000 பவுண்டுகள் மாத ஊதியத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications