தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.. பிரதமர்
கோயம்புத்தூர்:
தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டிய பிரதமர் வாஜ்பாய், மீண்டும் அவரை தமிழக மக்கள் முதல்வராக அமர்த்துவார்கள் எனநம்பிக்கை தெரிவித்தார்.
கோவையில், சுதேசி தொழில்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், கருணாநிதியுடன் வைத்துள்ள கூட்டணி தொடர்வது தமிழ்நாட்டுக்குமட்டுமல்ல இந்திய மக்களின் நலனுக்குமநல்லது. நிலையான ஒரு கூட்டணி ஆட்சி மத்தியில் ஆள்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அளிக்கும்ஒத்துழைப்பால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளின் நலன்கள் காக்கப்படுவதோடு பிராந்திய கட்சிகளின் உதவியோடு நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.மத்திய-மாநில அரசுகளின் உறவு சிறப்பாக உள்ளது.
நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு பொருளாதாரவல்லரசாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. மக்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய ஆற்ற வேண்டிய பணி அதிகம். தேசிய ஜனநாயக கூட்டணிஅந்த பணியை ஏற்ற நடத்தும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications