மனோகர் பிரிவு எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கத் தடை
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட 3 பாண்டிச்சேரிஎம்.எல்.ஏ.க்கள் சட்டசபை பதிவேட்டில் கையெழுத்திடலாம்.ஆனால் அவர்கள் ஓட்டெடுப்பில் பங்கு பெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
மனோகர் அணியைச் சேர்ந்த 3 த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செயப்பட வேண்டும் என அமைச்சர்கள்ஜெயக்குமார், கந்த சாமி ஆகியோர் பாண்டிச்சேரி சபா நாயகரிடம் முறையிட்டனர். அதன் படி அவர்கள் சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து த.மா.கா.எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகரின்பதவி நீக்க உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மீண்டும் அமைச்சர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தமைைை நீதிபதி ஜெயின் மற்றும் நீதிபதி சம்பத் அடங்கிய பெஞ்ச் 3 த.மா.கா எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை பதிவேட்டில்கையெழுத்திடலாம். ஆனால் ஓட்டெடுப்பில் பங்கெடுக்கக்கூடாது என இடைக்கால தீர்ப்பு வழங்கினார். அவர்கள் மேற்கொண்டு விசாரணையை அடுத்தமாதம் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications