கோவை வந்தார் வாஜ்பாய்
கோவை:
பிரதமர் வாஜ்பாய் சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கோவை வந்து சேர்ந்தார்.
மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன் ராதா கிருஷ்ணன், டி.ஆர்.பாலு, கண்ணப்பன், கோவை எம்.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க.தலைவர்கிருபாநிதி, பா.ஜ.க.பொதுச் செயலாளர் இல.கணேசன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பலர்விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் வாஜ்பாய் கொடேசியா கண்காட்சி வளாகத்தில் சுதேசி பொருட்கள் கண்காட்சியை வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கவுள்ளார்.
கோவையில் 1998 ம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் பிரதமர் வாஜ்பாய்.பின்னர் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு டெல்லி திரும்புகிறார் பிரதமர் வாஜ்பாய். பிரதமர் வருகையையொட்டு கோவை நகரில் வரலாறுகாணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications