For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜன் பிள்ளை சாவு .. சிபிஐ விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மும்பை திஹார் சிறையில் கடந்த 6 வருடங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மர்மமானமுறையில் இறந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை கொலை தொடர்பாக சிபிஐ விசாரணையை மீண்டும் நடத்தும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் அளித்த பேட்டி:

ராஜன் பிள்ளை சாவு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். தற்போது டெல்லி போலீஸிலிருந்து இந்த வழக்குசிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இவ்வழக்கு ஜனவரி 20 ம் தேதி எங்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

ராஜன் பிள்ளை கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்கூறிய கருத்துக்களையும் சேர்த்து விசாரணை மேற் கொள்ளப்படுகிறது என்றனர்.

முன்னதாக, ராஜன் பிள்ளையின் மனைவி நீனா பிள்ளை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், எனது கணவர் ராஜன்பிள்ளையும், தொழிலதிபர் நஸ்லி வாடியாவும் நணபர்கள். அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால்இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த என் கணவரை, நஸ்லி வாடியா, சந்திரசாமி, அமெரிக்கமுதலீட்டாளர் ரோஸ் ஜான்சன் ஆகியோர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே 1995 ம் ஆண்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது ராஜன் பிள்ளை மர்மமான முறையில்கொலை செய்யப்பட்டார். டாக்டர்கள் இதுகுறித்துத் தெரிவிக்கையில், லிவரில் ஏற்பட்ட கோளாறால் தான் ராஜன்பிள்ளை இறந்தார் என்றனர்.

இதுகுறித்து டெல்லி முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடந்ததுநினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X