தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா - மியான்மர் ஒப்பந்தம்
கவுஹாத்தி:
சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதச் செயல்களையும், தீவிரவாதிகளையும் ஒடுக்க இந்தியாவும், மியான்மரும் இணைந்து செயல்படுவது எனமுடிவெடுக்கப்பட்டது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மியான்மர் சென்றிருந்தார். அப்போது அவர் மியான்மரில் ராணுவ பொதுச் செயலாளரைச் சந்தித்துப்பேசினார். பேச்சுவார்த்தை முடிந்த பின் மியான்மர் ராணுவச் செயலாளர் கூறுகையில், வரும் ஆண்டுகளில் நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைஇந்தியாவும், மியான்மரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சனைகளைச் சமாளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்குமாநிலங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் உள்ளது. அங்கு தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது நாட்டை எதிர் நோக்கியிருக்கும் மிகப் பெரியபிரச்சனையாக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் நடத்தியும் செயல்பட்டு வருகிறார்கள். அங்கு டஜன் கணக்கில் தீவிரவாதிகள்ஊடுருவியுள்ளனர். இவர்கள் தீவிரவாதச் செயல்களை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவும், மியான்மரும் இணைந்து செயல்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.