2ம் உலகப்போரில் ஜப்பானின் கொடுமைகள்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் சாங்கி நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 59 வது பழைய ராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப்போரில்ஜப்பானிடம் போர்க் கைதியாக இருந்த பலர் பங்கேற்றனர்.

நேச நாடுகளின் (பிரிட்டன் ஆதரவு படைகள்) போர் வீரர்கள் பலரை ஜப்பான் நடத்திய விதம் குறித்து அவர்கள் நினைவு கூர்ந்தபோது அவர்களையறியாமல்கண்ணீர் பெருக்கெடுத்தது.

நகக்கண்ணை நீக்குதல், தலைகீழாக கட்டி தொங்கவிடுதல், மூச்சுதிணறும் அளவிற்கு முகத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்தல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளைபோர்க்கைதிகள் அனுபவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதான எலிசபெத் சோய் மற்றும் அவரது கணவர் ஆகியோர் ஜப்பான் ராணுவக் காவல்படை தலைமையகத்தில்கொடுமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது சிங்கப்பூரின் தேசிய போர் வீராங்கனையாக கருதப்படும் சோய்யின் தலைமையில் இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து போர்க் கைதிகளும் சாங்கிநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மியூசியத்தில் மரக் கன்றுகளை நட்டனர்.

போர்க் கைதிகள் பலர் பர்மா - தாய்லாந்து ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தனர். சாங்கியிலிருந்து தான் பெரும்பாலான போர்க்கைதிகள் இப்பணிக்கு அனுப்பப்பட்டனர்.

200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், போர்க்கால கொடுமைகளை வெளியில் கூற பலர் விரும்பவில்லை. பலர் கொடுமை தாங்காமல்தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் அதனை நினைத்து கண்ணீர் விட்டனர்.

ஜப்பானை இது விஷயத்தில் மன்னித்து விட்டாலும் நடந்த கொடுமைகளை மறக்க முடியவில்லை என்கிறார் கைரோஸ். இவர் ஜப்பானிய கார்கள் எதையும்வாங்க விரும்பாத இவர் காலம் என்னும் அருமருந்து பலவகையில் மனக்காயங்களை ஆற்றியுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+